ETV Bharat / state

சத்துணவு மையங்களை குறைக்க அரசு திட்டம்? - ஊழியர்கள், கல்வியாளர்கள் கொந்தளிப்பு!

சத்துணவு மையங்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் சத்தணவு ஊழியர்களும், கல்வியாளர்கள் கொந்தளித்துள்ளனர். இது குறித்த செய்தி தொகுப்பை காணலாம்.

author img

By

Published : Dec 4, 2022, 4:35 PM IST

Updated : Dec 4, 2022, 5:39 PM IST

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழ்நாட்டில் சத்துணவு மையங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் புள்ளி விபர கணக்கெடுப்பு நடைபெறுவதற்காகத் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. தமிழ்நாட்டில் நீதிக் கட்சி ஆட்சிக் காலத்தில் அப்போதைய சென்னை மாகாணத்தின் சில பள்ளிகளில் உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது காமராஜர் ஆட்சிக் காலத்தில் மதிய உணவுத் திட்டமாக மாறியது.

அதனைத் தொடர்ந்து எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டம் துவக்கப்பட்டுத் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணை இயக்குனர் 3-ஆம் தேதி நடத்திய கூட்டத்தில், ’ஒரே வளாகத்தில் செயல்படும் இரண்டு பள்ளிகளில் அமைந்துள்ள சத்துணவு மையங்கள் விபரம் ஏற்கனவே அனுப்பி உள்ளீர்கள். அதனை உறுதி செய்ய வேண்டும். ஊராட்சி ஒன்றியங்கள், மாநகராட்சி, நகராட்சிகளுக்கு உட்பட்ட அனைத்து சத்துணவு மையங்களையும் கணக்கில் கொண்டு, வட்டாரத்தைபொறுத்தவரை ஊராட்சியினை அடிப்படையாகவும், மாநகராட்சி, நகராட்சிகளில் வார்டுகளை அடிப்படையாக கொண்டு ஒரு பொது சத்துணவு மையத்தினை தேர்வு செய்து, அதனை சுற்றி 3 கிலோ மீட்டருக்குள் அமைந்துள்ள சத்துணவு மையங்கள் விபரத்தினை புள்ளி விபரமாகவும், வரைப்படத்திலும் பொருத்தி அனுப்பிட வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் துணைத்தலைவர் பேயத்தேவன் கூறியுள்ளதாவது, “2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவையில் தேர்தல் பணியில் உள்ள மற்றும் பணி ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்குத் தேர்தல் வாக்குறுதியாக இன்றய தமிழகமுதல்வர் தேர்தல் வாக்குறுதியாக பணியில் உள்ள ஊழியர்களை அரசுப் பணியாளராக்கி ஊதிய உயர்வும் பதவி உயர்வும் வழங்கப்படும்.

ஓய்வுபெற்ற ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச ஓய்வூதியமும் பணிக்கொடை 5 லட்சமும் வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கபட்டது. திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்து வந்து 2 வருடத்தினை நெருங்கி வருகிறது. ஆனாலும் தேர்தல் வாக்குறுதி ஏட்டளவிலேயே உள்ளது. எப்போது நிறைவேற்றபடும் என்று கூட சொல்வதற்கு ஆட்சியாளர்கள் தயாரில்லை என்ற நிலைதான் உள்ளது பலநினைவூட்டு இயக்கங்கள் நடத்திய பின்னும் கூட எந்தவித முன்னேற்றமும் இல்லை.

தேர்தல் வாக்குறுதி ஒரு பக்கமிருக்க காலி பணியிடங்கள் 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு நிரப்பப்படவில்லை. தமிழக அரசு காலை உணவுத் திட்டத்தை மகளிர் சுய உதவிக்குழு மூலம் செயல்படுத்துவோம் என அரசாணை வெளியிட்டது. ஆனால் சென்ட்ரல் கிச்சன்முறையில் வைத்துச் சமைத்து வழங்கப்படும் என உத்தரவிட்டபோதே சத்துணவுத் திட்ட காலி பணியிடங்களை நிரப்பப் போவதில்லை என தெரியவந்தது.

தற்போது அதற்கான அரசின் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது ஒரே வளாகத்தில் உள்ள மையங்கள் 3 கி.மீஅதனைச் சுற்றியுள்ள மையங்கள் கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிகிறது . தமிழ்நாட்டில் 43 ஆயிரம் பள்ளி சத்துணவு மையங்களில் ஒரு லட்சத்து 29 ஆயிரம் சத்துணவு ஊழியர்கள் பணிபுரிந்துவருகின்றனர். தமிழ்நாடு அரசு தற்போது முடிவெடுத்துள்ளபடி 85ஆயிரம் பணியிடங்கள் காலியாகும் நிலை ஏற்படும் வாய்ப்புக்களுள்ளது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் முற்றிலும் ஒழிந்துவிடும்.

சத்துணவுத் திட்டம் தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும். மாறாகத் திராவிட மாடல் என சொல்லிக்கொண்டு திட்டத்தைச் சீர்குலைக்க முயற்ச்சித்தால் ஊழியர்கள் போராடுவார்கள். இதுதான் ஊழியர்கள் மனநிலை அரசு ஊழியர் விரோத நடவடிக்கைகளைக் கைவிட்டு காலி பணியிடங்களை விரைந்து நிரப்பிட வேண்டும் தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற முன்வரவேண்டும்” என கூறியுள்ளார்.

பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறும்போது, “மாணவர்கள் எண்ணிக்கை குறைவு என்று காரணம் காட்டி ஆசிரியர் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. ஆசிரியர் எண்ணிக்கை குறையக் குறைய, அனைவருக்கும் சமமான கற்றல் வாய்ப்பு என்ற அரசுப் பள்ளியின் அடிப்படை நோக்கம் சிதைந்து போனது.மறுபுறம் எந்த ஆய்வும், புரிதலுமின்றி அரசுப் பள்ளிகளைச் சுற்றி தனியார் பள்ளிகளைத் திறக்க அனுமதியை அரசு வழங்கியது. வேறு வழியில்லாமல் பெற்றோர் தனியார் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தை அரசு உருவாக்கியது.

கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு குறைந்தபட்சம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளையாவது அருகமைப் பள்ளிகளாக அறிவிக்க மக்கள் கோரினார். ஆனால் அரசு தன் பள்ளியில் மாணவர் சேர்க்கைத் தொடங்கும் முன்பாக தனியார் பள்ளியில் அரசு செலவில் மாணவர்கள் சேர்கக்கயை நடத்தியது. இதன் விளைவு, அரசுப் பள்ளிகள் மேலும் பலவீனப்பட்டது.‌

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் துணைத்தலைவர் பேயத்தேவன்

இந்நிலையில், பள்ளிக் கல்வி இயக்குநர் பணியை ஆணையர் பதவியாக மாற்றி ஆட்சிப் பணி அதிகாரியை நியமித்தால் பள்ளிக் கல்வியை சீர்செய்து விடலாம் என்று ஐஏஎஸ் அதிகாரி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.‌ அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை மூடுவது, அரசுப் பணி ஆசிரியர், ஊழியர்கள் என்ற நிலையை மாற்றி, எல்லாமே தற்காலிக, ஒப்பந்த‌ பணியிடங்களாக மாற்றும் வேலையை அதிவேகமாக செய்து வருகின்றனர்.

அத்தகையத் தொடர் நடவடிக்கையில் ஒன்றுதான் சத்துணவு கூடங்கள் கணக்கெடுப்பு. சூடாக, சுகாதாரமாகப் பள்ளி வளாகத்திலேயே சமைத்து மாணவர்களுக்கு உணவு வருவதற்குப் பதிலாக சுய உதவிக் குழுக்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் மதிய சத்துணவை வழங்குவதற்குத் தேவைப்படும் அடிப்படை புள்ளி விவரங்களை அரசு தயாரிக்கத் தொடங்கி உள்ளது” என தெரிவித்தார்.

இது குறித்து சமூக நலம் மற்றும் மகளிர் உரிமையியல் துறையின் அதிகாரி கூறும்போது, “சத்துணவுத் திட்டத்தை மூடும் எண்ணம் அரசிற்கு இல்லை. அதனை மேலும் மேம்படுத்துவதற்குத் தான் இது போன்ற புள்ளி விபரங்கள் தயாரிக்கப்படுகிறது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஏடிஎம் மூலம் தங்கம் வாங்கலாம்.. சிறப்பம்சங்கள் என்ன?

சென்னை: தமிழ்நாட்டில் சத்துணவு மையங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் புள்ளி விபர கணக்கெடுப்பு நடைபெறுவதற்காகத் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. தமிழ்நாட்டில் நீதிக் கட்சி ஆட்சிக் காலத்தில் அப்போதைய சென்னை மாகாணத்தின் சில பள்ளிகளில் உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது காமராஜர் ஆட்சிக் காலத்தில் மதிய உணவுத் திட்டமாக மாறியது.

அதனைத் தொடர்ந்து எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டம் துவக்கப்பட்டுத் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணை இயக்குனர் 3-ஆம் தேதி நடத்திய கூட்டத்தில், ’ஒரே வளாகத்தில் செயல்படும் இரண்டு பள்ளிகளில் அமைந்துள்ள சத்துணவு மையங்கள் விபரம் ஏற்கனவே அனுப்பி உள்ளீர்கள். அதனை உறுதி செய்ய வேண்டும். ஊராட்சி ஒன்றியங்கள், மாநகராட்சி, நகராட்சிகளுக்கு உட்பட்ட அனைத்து சத்துணவு மையங்களையும் கணக்கில் கொண்டு, வட்டாரத்தைபொறுத்தவரை ஊராட்சியினை அடிப்படையாகவும், மாநகராட்சி, நகராட்சிகளில் வார்டுகளை அடிப்படையாக கொண்டு ஒரு பொது சத்துணவு மையத்தினை தேர்வு செய்து, அதனை சுற்றி 3 கிலோ மீட்டருக்குள் அமைந்துள்ள சத்துணவு மையங்கள் விபரத்தினை புள்ளி விபரமாகவும், வரைப்படத்திலும் பொருத்தி அனுப்பிட வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் துணைத்தலைவர் பேயத்தேவன் கூறியுள்ளதாவது, “2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவையில் தேர்தல் பணியில் உள்ள மற்றும் பணி ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்குத் தேர்தல் வாக்குறுதியாக இன்றய தமிழகமுதல்வர் தேர்தல் வாக்குறுதியாக பணியில் உள்ள ஊழியர்களை அரசுப் பணியாளராக்கி ஊதிய உயர்வும் பதவி உயர்வும் வழங்கப்படும்.

ஓய்வுபெற்ற ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச ஓய்வூதியமும் பணிக்கொடை 5 லட்சமும் வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கபட்டது. திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்து வந்து 2 வருடத்தினை நெருங்கி வருகிறது. ஆனாலும் தேர்தல் வாக்குறுதி ஏட்டளவிலேயே உள்ளது. எப்போது நிறைவேற்றபடும் என்று கூட சொல்வதற்கு ஆட்சியாளர்கள் தயாரில்லை என்ற நிலைதான் உள்ளது பலநினைவூட்டு இயக்கங்கள் நடத்திய பின்னும் கூட எந்தவித முன்னேற்றமும் இல்லை.

தேர்தல் வாக்குறுதி ஒரு பக்கமிருக்க காலி பணியிடங்கள் 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு நிரப்பப்படவில்லை. தமிழக அரசு காலை உணவுத் திட்டத்தை மகளிர் சுய உதவிக்குழு மூலம் செயல்படுத்துவோம் என அரசாணை வெளியிட்டது. ஆனால் சென்ட்ரல் கிச்சன்முறையில் வைத்துச் சமைத்து வழங்கப்படும் என உத்தரவிட்டபோதே சத்துணவுத் திட்ட காலி பணியிடங்களை நிரப்பப் போவதில்லை என தெரியவந்தது.

தற்போது அதற்கான அரசின் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது ஒரே வளாகத்தில் உள்ள மையங்கள் 3 கி.மீஅதனைச் சுற்றியுள்ள மையங்கள் கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிகிறது . தமிழ்நாட்டில் 43 ஆயிரம் பள்ளி சத்துணவு மையங்களில் ஒரு லட்சத்து 29 ஆயிரம் சத்துணவு ஊழியர்கள் பணிபுரிந்துவருகின்றனர். தமிழ்நாடு அரசு தற்போது முடிவெடுத்துள்ளபடி 85ஆயிரம் பணியிடங்கள் காலியாகும் நிலை ஏற்படும் வாய்ப்புக்களுள்ளது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் முற்றிலும் ஒழிந்துவிடும்.

சத்துணவுத் திட்டம் தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும். மாறாகத் திராவிட மாடல் என சொல்லிக்கொண்டு திட்டத்தைச் சீர்குலைக்க முயற்ச்சித்தால் ஊழியர்கள் போராடுவார்கள். இதுதான் ஊழியர்கள் மனநிலை அரசு ஊழியர் விரோத நடவடிக்கைகளைக் கைவிட்டு காலி பணியிடங்களை விரைந்து நிரப்பிட வேண்டும் தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற முன்வரவேண்டும்” என கூறியுள்ளார்.

பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறும்போது, “மாணவர்கள் எண்ணிக்கை குறைவு என்று காரணம் காட்டி ஆசிரியர் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. ஆசிரியர் எண்ணிக்கை குறையக் குறைய, அனைவருக்கும் சமமான கற்றல் வாய்ப்பு என்ற அரசுப் பள்ளியின் அடிப்படை நோக்கம் சிதைந்து போனது.மறுபுறம் எந்த ஆய்வும், புரிதலுமின்றி அரசுப் பள்ளிகளைச் சுற்றி தனியார் பள்ளிகளைத் திறக்க அனுமதியை அரசு வழங்கியது. வேறு வழியில்லாமல் பெற்றோர் தனியார் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தை அரசு உருவாக்கியது.

கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு குறைந்தபட்சம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளையாவது அருகமைப் பள்ளிகளாக அறிவிக்க மக்கள் கோரினார். ஆனால் அரசு தன் பள்ளியில் மாணவர் சேர்க்கைத் தொடங்கும் முன்பாக தனியார் பள்ளியில் அரசு செலவில் மாணவர்கள் சேர்கக்கயை நடத்தியது. இதன் விளைவு, அரசுப் பள்ளிகள் மேலும் பலவீனப்பட்டது.‌

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் துணைத்தலைவர் பேயத்தேவன்

இந்நிலையில், பள்ளிக் கல்வி இயக்குநர் பணியை ஆணையர் பதவியாக மாற்றி ஆட்சிப் பணி அதிகாரியை நியமித்தால் பள்ளிக் கல்வியை சீர்செய்து விடலாம் என்று ஐஏஎஸ் அதிகாரி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.‌ அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை மூடுவது, அரசுப் பணி ஆசிரியர், ஊழியர்கள் என்ற நிலையை மாற்றி, எல்லாமே தற்காலிக, ஒப்பந்த‌ பணியிடங்களாக மாற்றும் வேலையை அதிவேகமாக செய்து வருகின்றனர்.

அத்தகையத் தொடர் நடவடிக்கையில் ஒன்றுதான் சத்துணவு கூடங்கள் கணக்கெடுப்பு. சூடாக, சுகாதாரமாகப் பள்ளி வளாகத்திலேயே சமைத்து மாணவர்களுக்கு உணவு வருவதற்குப் பதிலாக சுய உதவிக் குழுக்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் மதிய சத்துணவை வழங்குவதற்குத் தேவைப்படும் அடிப்படை புள்ளி விவரங்களை அரசு தயாரிக்கத் தொடங்கி உள்ளது” என தெரிவித்தார்.

இது குறித்து சமூக நலம் மற்றும் மகளிர் உரிமையியல் துறையின் அதிகாரி கூறும்போது, “சத்துணவுத் திட்டத்தை மூடும் எண்ணம் அரசிற்கு இல்லை. அதனை மேலும் மேம்படுத்துவதற்குத் தான் இது போன்ற புள்ளி விபரங்கள் தயாரிக்கப்படுகிறது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஏடிஎம் மூலம் தங்கம் வாங்கலாம்.. சிறப்பம்சங்கள் என்ன?

Last Updated : Dec 4, 2022, 5:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.